Pages

Thursday, February 24, 2005

தமிழ் நாட்டை முன்னேற்ற - விவசாயம்

பெரிய பெரிய நிறுவனங்கள் ஒவ்வொன்றும், ஒரு குறைந்த பட்ச அளவாவது, சிறு விவசாய நிலங்களை தத்தெடுத்து விவசாயத்தை வளர்க்க வேண்டும்.

அவ்வாறு செய்யும் நிறுவனங்களுக்கு, அவர்கள் செய்யும் விவசாயத்தை அளவாக கொண்டு, அரசு அதற்கேற்றார் போல் வரிவிலக்கு அளிக்க வேண்டும். விவசாயத்தில் புதுப்புது டெக்னாலஜிகளை கண்டுபிடிக்க ஊக்கமளிக்க வேண்டும். இதற்காக சிறு நிலங்களை வைத்திருக்கும் விசாயிகளிடம் இருந்து நிலங்களை பிடுங்க கூடாது. அவர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும்.

விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு கம்ப்யூட்டர் நிறுவனம் வருடத்துக்கு 2 கோடி வரி கட்டுகிறதென்று வைத்துக்கொள்வோம். அவர்களை வருடத்துக்கு 10 லட்சத்தை விவசாயத்தில் இன்வெஸ்ட் செய்ய சொல்லலாம். மீதி 1.9 கோடியை மட்டும் வரியாக கட்ட சொல்லலாம்.

அந்த 10 லட்சம் இன்வெஸ்ட்மெண்ட்டில் அவர்களுக்கு லாபம் வந்தால், அதில் கூட வரிவிலக்கு அளிக்கலாம்.

1 comments: